வடமதுரை அருகே பரிதாபம் தொண்டையில் நிலக்கடலை சிக்கி குழந்தை உயிரிழப்பு.!



திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள செங்குளத்துபட்டியை சேர்ந்தவர் விஜய் (வயது 25). கூலித்தொழிலாளி. இவரது மனைவி ரேவதி (22). இந்த தம்பதிக்கு தர்ஷனா என்ற 1½ வயது குழந்தையும், 2½ மாதத்தில் மற்றொரு பெண் குழந்தையும் உள்ளனர்.

கடந்த 28-ந்தேதியன்று குழந்தை தர்ஷனா, வீட்டில் இருந்த நிலக்கடலையை தோலோடு விழுங்கி விட்டது. அப்போது, எதிர்பாராதவிதமாக தர்ஷனாவின் தொண்டையில் நிலக்கடலை தோல் சிக்கியதாக கூறப்படுகிறது. இதனால் மூச்சு விட முடியாமல் தர்ஷனா மயங்கி விழுந்தாள். 

இதனையடுத்து அவளை பெற்றோர், சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை தர்ஷனா நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தது. இதுகுறித்து ரேவதி கொடுத்த புகாரின் பேரில், வடமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow,Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments