கோட்டைப்பட்டினத்தில் பிரசித்தி பெற்ற ராவுத்தர் அப்பா தர்கா உள்ளது .இங்கு ஆண்டு தோறும் கந்தூரி விழா சிறப்பாக கொண்டாடப்படும். இதில் தமிழகம் முழுவதிலும் இருந்து 1 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்துக் கொள்வார்கள்.
இந்த ஆண்டுக்கான விழா கடந்த 22-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்தநிலையில் கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளதால் திருவிழாக்களில் அளவுக்கு அதிகமான கூட்டம் கூட கூடாது என்று மாவட்டம் நிர்வாகம் அறிவுறுத்தியது. வாண வேடிக்கைகள் விடக்கூடாது, தாரை தப்பட்டை அடிக்க கூடாது மற்றும் தர்கா வளாகத்தை சுற்றி கடைகள் ஏதும் இருக்க கூடாது என்ற நிபந்தனைகளுடன் கந்தூரி விழா நடத்த மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்தது.
இதனால் நேற்று நடைபெற்ற கந்தூரி விழா களையிழந்து காணப்பட்டது. விழாவில் அளவுக்கு அதிகமான கூட்டம் வந்துவிடாமல் தடுப்பதற்காக புதுக்கோட்டை போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன், அறந்தாங்கி சப்-கலெக்டர் ஆனந்த் மோகன் மற்றும் 400-க்கும் மேற்பட்ட போலீசார் ஆங்காங்கே தடுப்பு அமைத்து கூட்டம் கூடாத அளவுக்கு பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டனர். இந்த பாதுகாப்பு பணியை திருச்சி மத்திய மண்டல டி.ஐ.ஜி. ஆனி விஜயா பார்வையிட்டார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow,Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.