நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் உள்ள கருப்பம்புலம் ஊராட்சியில் 1957-ம் ஆண்டு முதல் 1986 வரை சுழற்சி முறையில் போட்டியின்றி ஊராட்சி மன்றத் தலைவர்கள் தேர்வு செய்யப்பட்டு வந்தனர். இதைத்தொடர்ந்து 1986-ல் நடைபெற்ற தேர்தலில் ஊராட்சி மன்றத் தலைவர், வாக்குப்பதிவின் மூலம் தேர்வு செய்யப்பட்டார். அதன் பிறகு சுழற்சி முறையில் போட்டியின்றி ஊராட்சி மன்றத் தலைவர்கள் தேர்வு செய்யப்பட்டு வந்தனர்.
இந்த நிலையில், பொதுத் தொகுதியாக அறிவிக்கப்பட்ட பின், கடந்த முறை கடுமையான போட்டி நிலவியது. இதில் பட்டதாரி இளைஞர் சுப்புராமன் வெற்றிபெற்றார். பதவியேற்ற பிறகு கட்டிட பராமரிப்பு, குடிநீர், மின்சாரம் என சுறுசுறுப்பாக இயங்கிய சுப்புராமன் தற்போது வரவு செலவு கணக்கை வெளிப்படையாக ஊர் மக்களுக்குத் தெரிவித்துள்ளார்
கடந்த 9 மாத வரவுசெலவு கணக்கை நோட்டீசாக அடித்து வீடு வீடாக விநியோகம் செய்துள்ளார் இளம் ஊராட்சிமன்றத் தலைவர் சுப்புராமன். வரி வசூல் எவ்வளவு?, மொத்த வரவு என்ன? இதுவரை செய்யப்பட்ட செலவுகள் எவ்வளவு? கையிருப்பு என்ன? உள்ளிட்ட அனைத்து விவரங்களும் அடங்கிய தெளிவான விளக்கம் நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெரிவித்துள்ள ஊராட்சிமன்றத் தலைவர் சுப்புராமன், ஊராட்சியில் நடக்கும் வரவு செலவு கணக்குகளை ஊர் மக்கள் அனைவரும் தெரிந்துகொள்ளவேண்டும். அப்போதுதான் ஊராட்சி நிலவரங்கள் அவர்களுக்குப் புரியவரும் என தெரிவித்துள்ளார்.
இதுவரை போட்டியின்றி ஊராட்சிமன்றத் தலைவர்கள் தேர்வு செய்யப்பட்டு வந்த நிலையில், ஊராட்சி நிர்வாகத்தில் என்ன நடக்கிறது என்றே தெரியாது என்றும், ஆனால் இப்போது ஊராட்சி மன்றத்தில் வெளிப்படைத்தன்மை இருப்பதாகவும் அக்கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக வரவுசெலவு கணக்குகளை தெரிவிப்பதன் மூலம் ஊராட்சி நிர்வாகம் தொடர்பாக புரிதல் ஏற்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow,Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.