குறைதீர் கூட்டம் நடத்தப்படாததால் பெட்டியில் மனுக்களை போட்டுச்சென்ற பொதுமக்கள்




புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை அன்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில், தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026-க்கான தேர்தல் தேதி நேற்று முன்தினம் மாலை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டது. இதனைத்தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது. இதன் தொடர்ச்சியாக புதுக்கோட்டை மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறாது என்றும், அதற்கு மாறாக பொதுமக்கள் தங்களது புகார்கள் மற்றும் கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை மாவட்ட கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் வைக்கப்படும் மனுக்கள் பெறும் பெட்டியில் போட்டு செல்லுமாறு மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, நேற்று பொதுமக்கள் பலர் புகார் மற்றும் கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை கொண்டு வந்தனர். தொடர்ந்து, மாவட்ட கலெக்டர் அலுவலகத்தின் நுழைவுவாயிலில் வைக்கப்பட்டிருந்த மனுக்கள் பெறும் பெட்டியில் அதனை போட்டுச்சென்றனர். 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இந்த பெட்டியில் மனுக்களை போட்டுச்சென்றனர். தேர்தல் முடிந்து மறு அறிவிப்பு வரும் வரையிலும் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறாது என்றும், அதுவரையிலும் இந்த நடைமுறை செயல்பாட்டில் இருக்கும் என்றும் மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments