புதுக்கோட்டையில் மக்கள் நீதிமன்றம் மூலம் 15 வழக்குகளுக்கு சமரச தீர்வு.!



புதுக்கோட்டையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்திற்கு மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும், மாவட்ட நீதிபதியுமான கோகிலா தலைமை தாங்கினார். நீதிபதி உஷாராணி மக்கள் நீதிமன்றத்தை தொடங்கி வைத்தார்.

சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளர் மற்றும் முதன்மை நீதிபதி மகாலட்சுமி, கூடுதல் சார்பு நீதிபதி அசோக்குமார், நீதிபதி அறிவு, கூடுதல் மகிளா நீதிபதி ஜியாவுர் ரகுமான் ஆகியோர் கொண்ட அமர்வினர் வழக்கை விசாரித்தனர். 

இதில், நிலுவையில் உள்ள மோட்டார் வாகன விபத்து காப்பீடு வழக்குகள், குடும்ப வழக்குகள், காசோலை மோசடி வழக்குகள் உள்ளிட்டவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. அதில், 15 வழக்குகளுக்கு சமரச தீர்வு காணப்பட்டு ரூ.15 லட்சத்து 93 ஆயிரத்து 250 உரியவர்களுக்கு வழங்கப்பட்டன.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow,Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments