புதுக்கோட்டை மாவட்டத்தில் புகார்தாரர்களின் வீட்டிற்கே சென்று போலீசார் விசாரணை நடத்தும் நடைமுறை நேற்று அமலுக்கு வந்தது. அந்தவகையில் ஒரே நாளில் 43 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டன.
கொரோனா வைரஸ் தொற்று இன்னும் குறையாததால் வருகிற 31-ந் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது. தொற்று பரவி வருவதை தவிர்க்கும் பொருட்டும், பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டும், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் மற்றும் போலீஸ் நிலையங்களுக்கு வரும் புகார்களின் மீது நடவடிக்கை எடுக்கும் விதமாக சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் பெறப்பட்ட புகார்களின் மீது புகார்தாரர்களின் வீட்டிற்கே நேரிடையாக சென்று விசாரணை செய்து, மக்களுக்கு உரிய வகையில் தீர்வுகாண வழிவகைசெய்ய வேண்டும் என கூடுதல் டி.ஜி.பி. ராஜேஸ்தாஸ் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் புகார்தாரர்களின் வீட்டிற்கே சென்று போலீசார் விசாரிக்கும் புதிய நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார். மேலும் பொதுமக்கள் கொடுக்கும் புகார் மனுக்கள் மீது நேரிடையாக சம்பந்தப்பட்ட விசாரணை அதிகாரிகளால் தீர்வு காணப்பட்டு வருகிறது எனவும் கூறியுள்ளார்.
இந்த புதிய நடைமுறை நேற்று முதல் அமலுக்கு வந்தது. இதைத்தொடர்ந்து மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் உள்ள போலீசார், புகார்தாரர்களின் வீட்டிற்கே சென்று விசாரித்தனர். டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் தனது சரகத்திற்குட்பட்ட பகுதியான ஆதனக்கோட்டையில் விசாரணை நடத்தினார். மேலும் மாவட்டம் முழுவதும் ஒரே நாளில் 43 புகார் மனுக்கள் தீர்வு காணப்பட்டன.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow,Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia

0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.