ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா ஓரியூர் அருகே உள்ள உப்புக்கோட்டை தோப்பை சேர்ந்தவர் பிரபு என்ற ராஜேஷ்குமார் (வயது 29).
இவர் ஆவுடையார் கோவில் அருகே உள்ள கலபம் கிராமத்தை சேர்ந்த ரேகா (28) என்பவரை திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு 5 வயதில் ஒரு மகனும், 3 வயதில் ஒரு மகளும் உள்ளனர். இந்த நிலையில் குழந்தைகளுடன் தாய் வீட்டுக்கு வந்த ரேகாவை கடந்த 2 ஆண்டுகளாக காணவில்லை. ராஜேஷ்குமார் மனைவியை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதனால் மனம் உடைந்த ராஜேஷ் குமார் நேற்று ஆவுடையார் கோவில் பாபா கோவில் அருகே உள்ள ஒரு கொட்டகையில் தூக்குப்போட முயற்சித்துள்ளார். அப்போது, கயிறு அறுந்ததில் கீழே விழுந்த ராஜேஷ்குமார் தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார். இது குறித்து ராஜேஷ்குமாரின் தாய் மாமன் நரிக்குடியை சேர்ந்த வேலுச்சாமி ஆவுடையார் கோவில் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன், சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ராஜேஷ்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow,Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia

0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.