கோபாலப்பட்டிணத்தில் 1-வது, 5-வது மற்றும் 11-வது படிக்கும் பள்ளி மாணவர்களுக்கு வருடாந்திர தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.
கொரோனா தொற்று காரணமாக பள்ளி கூடங்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் 1-வது, 5-வது மற்றும் 11-வது படிக்கும் பள்ளி மாணவர்களுக்கு வருடந்தோரும் பள்ளி கூடங்களில் வைத்து போடப்படும் தடுப்பூசியானது இன்று முதல் 19/10/2020 (திங்கட்கிழமை) வருகிற 22/10/2020 (வியாழக்கிழமை) மற்றும் 23/10/2020 (வெள்ளிக்கிழமை) என வாரத்தில் மூன்று நாட்களில் பள்ளி மாணவர்களுக்கான தடுப்பூசி மருத்துவ முகாம் நடைபெற உள்ளது.
இந்த முகாமானது இந்தவாரம் முழுவதும் அவுலியா நகர் அங்கன்வாடி கட்டிடத்தில் காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை நடைபெற உள்ளது.
கீழ்கண்ட வயதுடைய மாணவ, மாணவியருக்கு தடுப்பூசி போடப்பட உள்ளது.
1 வகுப்பு - (5 வயது முதல் 6 வரை)
5 வகுப்பு - (10 வயது முதல் 11 வரை)
11 வகுப்பு - (15 வயது முதல் 16 வரை)
எனவே கோபாலப்பட்டிணத்தை சேர்ந்த மேற்கண்ட வயதுடைய பள்ளி மாணவர்கள் அனைவரும் இந்த தடுப்பூசி முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இந்த மருத்துவ முகாம் வருகிற டிசம்பர் மாதம் வரை நடைபெற உள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.