புதுக்கோட்டை மாவட்டத்தில் இரண்டாவது பெரிய நகராட்சியாக அறந்தாங்கி நகராட்சி உள்ளன. அறந்தாங்கியை சுற்றி 300 கிராமங்கள் உள்ளது. இந்த கிராம பகுதிகளில் அனைத்து விதமான விவசாய பொருட்களையும் விவசாயிகள் சாகுபடி செய்கின்றனர். விவசாயிகள் தங்கள் உற்பத்தி செய்த விவசாய பொருட்களை வியாபாரிகளிடம் கொண்டு வந்து விற்பனை செய்து வந்தனர். வியாபாரிகள் அனைவரும் அறந்தாங்கி பேராவூரணி சாலையில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை செயல்படும் வாரச்சந்தைக்கு கொண்டு வந்து விற்பனை செய்து வந்தனர்.
இதேபோல் அனைத்து வியாபாரிகளும் அவர் அவர் வியாபாரம் செய்யும் பொருட்களை கொள்முதல் செய்து சந்தையில் விற்பனை செய்து வந்தனர். இதனால் விவசாயிகளுக்கும், வர்த்தகர்களுக்கும் வருமானம் கிடைத்தது. தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்தது.
வாரச்சந்தையால் அறந்தாங்கியில் பணபுழக்கம் அதிகமாக இருந்து வந்தது. கடந்த மார்ச் மாதம் கொரோனா தொற்று காரணமாக மூடப்பட்ட செவ்வாய் வாரச்சந்தை 7 மாதம் ஆகியும், இன்று வரை சந்தை திறக்கப்பட வில்லை. இதனால் விவசாயிகள், வர்த்தகர்கள், மூட்டை தூக்கும் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். மாவட்ட தலைநகர் புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதியில் வாரச்சந்தை தற்போது செயல்பட்டு வருகிறது.
அறந்தாங்கி வாரச்சந்தை மட்டும் மூடிக்கிடக்கிறது. அறந்தாங்கி வாரச்சந்தை செயல்படும் இடம் தஞ்சாவூர் சமஸ்தானத்திற்கு சொந்தமான இடத்தில் உள்ளது. இந்நிலையில் தஞ்சாவூர் சமஸ்தானத்திடம் சந்தையை குத்தகை எடுத்து உள்ள நபர்களுக்கும் உள்ள பிரச்சினையால் வாரச்சந்தை மூடி கிடக்கிறது என கூறப்படுகிறது. வாரந்தோறும் கிராம பகுதியில் இருந்து சந்தையில் பொருட்கள் வாங்க வரும் நபர்கள் சந்தை மூடி கிடப்பதால் திரும்பி செல்கின்றனர். இதனால் மாவட்ட நிர்வாகம் அறந்தாங்கி வாரச்சந்தை செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.