புதுக்கோட்டை மாவட்டத்தில் மத்திய, மாநில அரசு அலுவலகங்களில் பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படம் வைக்க வேண்டும் என பா.ஜ.க.வினர் ஏற்கனவே கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்திருந்தனர். இந்த நிலையில் பா.ஜ.க. தொழில்நுட்ப பிரிவின் மாவட்ட தலைவர் சீனிவாசன் தலைமையில் பா.ஜ.க.வினர் நேற்று புதுக்கோட்டை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மத்திய, மாநில அரசு அலுவலகங்களில் பிரதமரின் புகைப்படம் வைப்பதற்காக அதனை எடுத்து வந்தனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர். மேலும் கலெக்டர் அலுவலகத்தின் உள்ளே செல்லவிடாமல் அவர்களை தடுத்தனர்.
புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் தண்டாயுதபாணி முன்னிலையில் அமைதி பேச்சுவார்த்தை நடந்தது. பிரதமரின் புகைப்படம் வைப்பது தொடர்பாக உரிய முடிவு எடுக்கப்படும் எனவும், 27-ந் தேதிக்குள் முடிவு எடுக்கப்படும் எனவும் கோட்டாட்சியர் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என பா.ஜ.க.வினர் தெரிவித்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.