ஆலங்குடி அருகே லாரி மோதி எண்ணெய் வியாபாரிகள் 2 பேர் பலி





    தஞ்சாவூர் அருகே உள்ள வல்லம் செட்டித்தெருவை சேர்ந்தவர் ரத்தினவேல் (வயது 49). அதே பகுதியை சேர்ந்தவர் அழகர்(62). இருவரும் கடலை எண்ணெயை சொந்தமாக தயாரித்து விற்பனை செய்து வந்தனர். சம்பவத்தன்று எண்ணெய் தயாரிப்பதற்காக நிலக்கடலை வாங்குவதற்காக புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடிக்கு மோட்டார் சைக்கிளில் வந்தனர். பின்னர் இருவரும் மீண்டும் சொந்த ஊருக்கு சென்று கொண்டிருந்தனர். 

ஆலங்குடி-ஆதனக்கோட்டை சாலையில் இருங்குளவன்பட்டி உப்பு கொட்டைமுனியன் கோவில்குளம் அருகே சென்றபோது, எதிரே வந்த லாரி திடீரென்று அவர்கள் மீது மோதியது. இதில் லாரியின் சக்கரத்தில் சிக்கி ரத்தினவேல் தலைநசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதனையடுத்து லாரியை, அதன் டிரைவர் அங்கேயே நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார்.


 
படுகாயம் அடைந்த அழகரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி அழகர் இறந்தார். 

இதுகுறித்த புகாரின் பேரில் சம்பட்டிவிடுதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தப்பி ஓடிய லாரி டிரைவர் ஆலங்குடி அருகே உள்ள கொத்தமங்கலத்தை சேர்ந்த ராஜ்குமார் என தெரியவந்தது. அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments