புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு அருகே உள்ள நெடுவாசல் கிழக்கு கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 71). விவசாயியான இவருக்கு நெடுவாசல் வடக்கு கிராமத்தில் தென்னந்தோப்பு உள்ளது. நேற்று இவரது தோப்பில் தேங்காய் பறிக்கும் பணிகள் நடைபெற்றது. அப்போது, ஆறுமுகம் உள்பட தொழிலாளர்கள் ஒரு தென்னைமரத்தின் அடியில் நின்று கொண்டிருந்தனர்.
இதற்கிடையில் அந்த மரத்தில் கூடுகட்டி இருந்த கதண்டுகள் திடீரென்று கலைந்து அங்கும், இங்குமாக பறந்து சென்றது. இதனையடுத்து தென்னைமரத்தின் கீழே நின்றிருந்த ஆறுமுகத்தை நூற்றுக்கணக்கான கதண்டுகள் கடித்தது. மேலும் அருகே நின்றுகொண்டு இருந்த கூலி தொழிலாளர்களையும் கதண்டுகள் கடித்தன. இதைப்பார்த்த மற்றதொழிலாளர்கள் கதண்டுகளை தீயிட்டு விரட்டினர். தொடர்ந்து கதண்டுகள் கடித்ததில் படுகாயம் அடைந்த ஆறுமுகத்தை மீட்டு பட்டுக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே ஆறுமுகம் பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும் கதண்டுகள் கடித்ததில் பெண்கள் உட்பட 5 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் நெடுவாசலில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.