விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், விவசாயின் தலையில் குத்திய குச்சிகளை 5 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து அகற்றினர்.
செஞ்சி அருகே மழவந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த பெருமாள் என்பவரது மகன் குமார் (42). விவசாயியான இவர் கடந்த 7- ம்தேதி பைக்கில் வந்த போது திடீரென நாய் குறுக்கே ஓடியது. அவர் நிலை தடுமாறி சாலையோரம் இருந்த புதரில் விழுந்தார். அப்போது, மரக் கொம்புகள் தலையில் குத்தி துளைத்தது. உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் விழுப் புரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப் பட்டார்.
அவரை சி.டி.ஸ்கேன் எடுத்து பார்த்த போது, அவரது இடது பக்க மூளையில் 4 செ.மீட்டர் தடிமன், 7 செ.மீட்டர் நீளமுள்ள மரக்குச்சி, 5 செ.மீட்டர் ஆழத்திற்குள் இருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்தனர். மருத்துவக் கல்லுாரி முதல்வர் குந்தவி தேவி மேற்பார்வையில் மூளை மற்றும் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் பல்லவன் தலைமையில் அறுவை சிகிச்சை மருத்துவர்கள் கபிலன், சவுந்தர்ராஜன், சுரேஷ் , பயிற்சி மருத்துவர்கள் கோகுல குமரன், செந்தில், நாராயணன், மயக்கவியல் துறை மருத்துவர்கள் தர்மலிங்கம், அறிவழகன், பத்ம ரூபினி ஆகியோர் கொண்ட குழுவினர் குமாருக்கு இரண்டு கட்டங்களாக 5 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்தனர். ‘ரிங் கிரேனியக்டமி’ முறையில் 5 மணி நேரம்அறுவை சிகிச்சை செய்து மூளை யில் குத்தியிருந்த மரக்குச்சியை அகற்றி சாதனை செய்தனர்.
இது குறித்து மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் குந்தவி தேவி கூறியதாவது: குமாருக்கு தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்திருந்தால் ரூ.15 லட்சம் வரை செலவாகி யிருக்கும். முதல்வரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் அவருக்கு இலவசமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது என்று தெரி வித்தார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.