ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் இருந்து ராமேசுவரம் தீவை இணைப்பதில் பாம்பன் ரெயில் பாலம் முக்கிய பங்கு வகித்து வருகிறது. மிக பழமையான இந்த பாலத்தின் அருகிலேயே சுமார் 50 மீட்டர் இடைவெளியில் ரூ.250 கோடியில் புதிதாக ரெயில் பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
இந்தநிலையில், அதிரடியாக தொடங்கிய வடகிழக்கு பருவமழையாலும், கடல் அலையின் வேகம் காரணமாகவும் நேற்று முன்தினம் நள்ளிரவு 2 மணியளவில் புதிய பாலம் கட்டும் பணிகளுக்காக கடலில் நிறுத்தியிருந்த ராட்சத கிரேனுடன் கூடிய 2 மிதவைகள், கடல் அலையின் வேகத்தில் இழுத்துவரப்பட்டு ரெயில் பாலத்தின் தூண்கள் மீது மோதியபடி நின்றன.
இதுகுறித்து தெரிவிக்கப்பட்ட தகவலை தொடர்ந்து, அங்கு விரைந்து வந்த அதிகாரிகள், தூக்குப்பாலத்தின் அருகில் தூண்களில் மோதி நின்ற 2 மிதவைகளையும் படகுகள் உதவியுடன் இழுத்து தொலைவில் கொண்டு சென்று நிறுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
ரெயில் பாலத்தில் மிதவைகள் மோதியதை தொடர்ந்து நேற்று அதிகாலை சென்னையில் இருந்து ராமேசுவரம் வரவேண்டிய சேது எக்ஸ்பிரஸ் ரெயில் மண்டபம் ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது.
மேலும் ரெயில் பாலத்தின் தூண்களில் ஏதேனும் பாதிப்பு உள்ளதா? என்பது குறித்து ரெயில்வே பொறியாளர்கள் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.