புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்தம் 13,10,068 வாக்காளர்கள்.. வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டு கலெக்டர் தகவல்.!!



புதுக்கோட்டை மாவட்டத்தில் 2021க்கான வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியரகத்தில் கலெக்டர்.பி.உமாமகேஸ்வரி இன்று அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் வெளியிட்டார்.

பின்னர் கலெக்டர் தெரிவித்ததாவது, புதுக்கோட்டை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு முறை சுருக்கத் திருத்தம் 2021க்கான வரைவு வாக்காளர் பட்டியல் இன்றைய தினம் வெளியிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் 6,48,773 ஆண் வாக்காளர்கள், 6,61,231 பெண் வாக்காளர்கள் மற்றும் 64 மூன்றாம் பாலினத்தவர்கள் சேர்த்து மொத்தம் 13,10,068 வாக்காளர்கள் 2021ம் ஆண்டிற்கான வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். 

2020ம் ஆண்டிற்கான இறுதி வாக்காளர் பட்டியலில் (14.02.2020ன் படி) மொத்தம் 13,15,498 வாக்காளர்கள் இடம் பெற்றிருந்தனர். 14.02.2020 முதல் 31.10.2020 வரை நடைபெற்ற 2020ம் ஆண்டிற்கான தொடர் திருத்தத்தின் போது 1,531 ஆண் வாக்காளர்கள், 1,590 பெண் வாக்காளர்கள் மற்றும் 1 மூன்றாம் பாலினத்தவர் சேர்த்து மொத்தம் 3,122 வாக்காளர்கள்; புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். 

14.02.2020 முதல் 31.10.2020 வரை நடைபெற்ற 2020ம் ஆண்டிற்கான தொடர் திருத்தத்தின்போது 4,440 ஆண் வாக்காளர்கள், 4,090 பெண் வாக்காளர்கள் மற்றும் 22 மூன்றாம் பாலினத்தவர்கள் சேர்த்து மொத்தம் 8,552 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் 1,547 வாக்குசாவடி மையங்கள் உள்ளன. மேலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் நகர எல்கைக்குள் 85 வாக்குச்சாவடி அமைவிடங்கள் மற்றும் கிராம எல்கைக்குள் 843 வாக்குச்சாவடி அமைவிடங்கள் என மொத்தம் 928 வரையறுக்கப்பட்ட வாக்குச்சாவடி அமைவிடங்கள் உள்ளன.

மேலும் சிறப்பு முறை சுருக்கத் திருத்தம் 2021ன் தொடர்ச்சியாக, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் தொடர்பான மனுக்கள் பெற 16.11.2020 முதல் 15.12.2020 வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. வாக்காளர்களின் வசதிக்கேற்ப 21.11.2020 (சனிக்கிழமை), 22.11.2020 (ஞாயிற்றுக்கிழமை), 12.12.2020 (சனிக்கிழமை) மற்றும் 13.12.2020 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய 4 தினங்கள் சிறப்பு முகாம் 928 வரையறுக்கப்பட்ட வாக்குச்சாவடி அமைவிடங்களில் நடைபெறும். 2021ம் ஆண்டிற்கான இறுதி வாக்காளர் பட்டியல் எதிர்வரும் 20.01.2021 (புதன்கிழமை) அன்று வெளியிடப்பட உள்ளது. இவ்வாறு கலெக்டர் பி.உமாமகேஸ்வரி தெரிவித்துள்ளார். 

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பெ.வே.சரவணன், அறந்தாங்கி வருவாய் கோட்ட உதவி ஆட்சியர் ஆனந்த் மோகன், வருவாய் கோட்டாட்சியர்கள் தண்டாயுதபாணி, டெய்சிக்குமார், வட்டாட்சியர் (தேர்தல்) சங்கர், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments