புதுக்குடி அருகே கடலில் மிதந்து வந்த 56 கிலோ கஞ்சா மூட்டைகள்.!



  

 
        கோட்டைப்பட்டினம் அருகே கடலில் கஞ்சா மூட்டைகள் மிதந்து வந்தன. யாராவது இலங்கைக்கு கஞ்சாவை கடத்த முயற்சி செய்தனரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோட்டைப்பட்டினம் அருகே புதுக்குடி கிராமத்தில் இருந்து நேற்று முன்தினம் நாட்டுப்படகு மூலம் ஏராளமான மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர்.அப்போது கடலில் 2 சாக்கு மூட்டைகள் மிதந்து வந்தன.அதனை கைப்பற்றிய மீனவர்கள் அதனை கடலோர காவல் குழுமத்தினரிடம் ஒப்படைத்தனர். இதனையடுத்து கடலோர காவல் குழுமத்தினர் அந்த மூட்டைகளை பிரித்து பார்த்தபோது அதில் 56 கிலோ கஞ்சா இருந்தது.

பின்னர் அதனை கைப்பற்றி சிவகங்கை போதை பொருள் நுண்ணறிவு பிரிவிடம் ஒப்படைத்தனர்.

இந்நிலையில் நேற்று புதுக்குடி கிராமத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் மீண்டும் ஒரு சாக்கு மூட்டை மிதந்து வருவதை கண்டு அதனை எடுத்துக் கொண்டு கரை திரும்பி கடலோர காவல் குழுமத்தினருக்கு தகவல் கொடுத்தனர். அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த கடலோர காவல் குழும சப்-இன்ஸ்பெக்டர்கள் முத்துகண்ணு, ராஜ்குமார் ஆகியோர் அந்த மூட்டையை பிரித்து பார்த்துள்ளனர். அப்போது அதில் 26 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது.



இலங்கைக்கு கஞ்சாவை யாராவது கடல் வழியே கடத்தி சென்றிருக்கலாம். அவ்வாறு சென்ற போது கடற்படையினர் சர்வதேச எல்லையில் இருந்ததால் பிடிப்பட்டுவிடக்கூடாது என்பதற்காக கஞ்சாவை கடலில் வீசி விட்டு அங்கிருந்து தப்பித்து ஓடி இருக்கலாம். இதனால் அந்த கஞ்சா மூட்டைகள் தற்போது கரை ஒதுங்கி இருக்கலாமா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அடுத்தடுத்த நாட்களில் கஞ்சா மூட்டைகள் இப்பகுதியில் மிதந்து வந்ததால் புதுக்குடி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments