புதுக்கோட்டை மற்றும் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கடந்த சில மாதங்களுக்கு முன்பே வாரச் சந்தைகள் செயல்பட தொடங்கியது. ஆனால் அறந்தாங்கி வாரச்சந்தை மட்டும் மூடிகிடந்தது. இதனால் விவசாயிகளும், வர்த்தகர்களும் பாதிப்படைந்து வருகின்றனர். எனவே வாரச்சந்தையை திறக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதை தினத்தந்தி நாளிதழில் சுட்டிக்காட்டப்பட்டு இருந்தது.
இதையடுத்து தஞ்சாவூர் சத்திரம் கட்டுபாட்டின் கீழ் செயல்படும் இந்த வாரச்சந்தையை தொடங்குவது என முடிவு செய்து தஞ்சாவூர் சத்திரம் நிர்வாகத்தின் சார்பில் ஒலி பெருகி மூலம் சந்தை செயல்பட உள்ளது என அறிவிப்பு செய்யப்பட்டு நேற்று சந்தை செயல்பட்டது.
ஆடுகளை வாங்க ஆர்வம்
இந்த சந்தையில் ஆடு, மாடு, கோழி வாங்க பொதுமக்கள் அதிக அளவில் ஆர்வம் காட்டினார்கள். தீபாவளி பண்டிகை நெருங்குவதால் இப்போது, பொதுமக்கள் அதனை வாங்க தொடங்கி விட்டனர்.ஆனால் காய்கறி உள்ளிட்ட பொருட்களை குறைவானவர்களே வாங்கினர். சந்தையில் பொதுமக்கள் சமூகஇடைவெளியை கடைபிடிக்காமல் பொருட்களை வாங்கி சென்றனர்.
அறந்தாங்கி வாரச்சந்தை செயல்பாட்டிற்கு வந்ததால் விவசாயிகள், வர்த்தகர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.