திருச்சி துப்பாக்கி தொழிற்சாலை அண்ணாநகரை சேர்ந்தவர் ஜெகநாதன் (வயது 70). ஓய்வுபெற்ற துப்பாக்கி தொழிற்சாலை ஊழியரான இவரும், இவரது மனைவி தனபாக்கியம் (67) என்பவரும் நேற்று புதுக்கோட்டையில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றனர்.
பின்னர் அவர்கள் அங்கிருந்து, மீண்டும் சொந்த ஊருக்கு வருவதற்காக திருச்சி செல்லும் அரசு பஸ் ஏறி பயணம் செய்தனர். அப்போது தனபாக்கியம் தான் வைத்திருந்த தங்கச் சங்கிலி உள்ளிட்ட 14 பவுன் நகைகள் மற்றும் ரூ.7 ஆயிரம் ஆகியவற்றை ஒரு கைப்பையில் வைத்து, மற்றொரு பையில் அதனை போட்டு இருந்தார்.
ஓடும் பஸ்சில் திருட்டு
இதற்கிடையில் பஸ்சில் கைப்பையில் இருந்து பணத்தைஎடுத்து டிக்கெட் வாங்கி, மீண்டும் அதனுள் வைத்து இருந்தார். பின்னர்அவர்கள் மாத்தூர் ரவுண்டானா வந்ததும் பஸ்சை விட்டு இறங்கி பையை பார்த்தபோது அதில் தங்க நகை, பணம் உள்ளிட்டவை வைத்திருந்த கைப்பையை காணாதது கண்டு அதிர்ச்சி அடைந்தார். யாரோ நோட்டமிட்டு ஓடும் பஸ்சில் அதனை திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து தனபாக்கியம் மாத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தனபாக்கியம் வைத்திருந்த நகை-பணம் வைத்திருந்த கைப்பையை திருடிய ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.