மருத்துவ படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பப்பதிவு தொடங்கியுள்ள நிலையில், அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் ஓராண்டுக்கு கல்விக் கட்டணம் எவ்வளவு என்பது குறித்த தகவல்களை மருத்துவ மாணவர் சேர்க்கை அலுவலகம் தெரிவித்துள்ளது.
அரசு மருத்துவ கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். படிப்புக்கு ஓராண்டுகு 13 ஆயிரத்து 610 ரூபாயும், பல் மருத்துவ படிப்புக்கு 11 ஆயிரத்து 610 ரூபாயும் கட்டணம் செலுத்த வேண்டும். அரசு நிரப்பும் ராஜா முத்தையா மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிப்புக்கு 4 லட்சம் ரூபாயும், பல் மருத்துவப் படிப்புக்கு 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு பெருந்துறை மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிப்புக்கு 3 லட்சத்து 85 ஆயிரமும், கே.கே.நகர் இ.எஸ்.ஐ. மருத்துவ கல்லூரியில் 1 லட்சமும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. இவற்றில் ஓ.சி., பி.சி., எம்.பி.சி., எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர்களுக்கு என தனியாக கட்டணம் உள்ளது. தனியார் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு ஆண்டுக்கு 3 லட்சத்து 60 ஆயிரம் முதல் 4 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் வரையிலும், பல் மருத்துவப் படிப்புக்கு 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தனியார் கல்லூரிகளில் இருக்கும் நிர்வாக ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு ஆண்டுக்கு 12 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும். இருப்பினும், வேலூர் கிறிஸ்தவ மருத்துவ கல்லூரி மட்டும் ஆண்டுக்கு 48 ஆயிரத்து 330 ரூபாயும், வெளிநாடு வாழ் இந்திய மாணவர்களுக்கு 20 லட்சத்து 50 ஆயிரம் முதல் 23 லட்சத்து 50 ஆயிரம் வரை கட்டணம் நிர்ணயித்துள்ளது.
அதேபோல், தனியார் கல்லூரிகளில் உள்ள பல் மருத்துவ படிப்பு இடங்களுக்கு 6 லட்சம் ரூபாயும், வெளிநாடு வாழ் இந்திய மாணவர்களுக்கு 9 லட்சம் ரூபாயும் கட்டணமாக உள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.