சிவகங்கை: சிவகங்கையிலிருந்து தொண்டி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சாலை உயரமாகவும், அபாயகரமான வளைவுகளும் இருப்பதால் வாகனங்கள் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. எனவே வளைவுகளில் தடுப்புகள் அமைக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
மதுரை, தொண்டி சாலை தேசிய நெடுஞ்சாலையாக மாற்றப்படு கடந்த 2012ல் முதற்கட்டமாக திருப்புவனம் அருகிலிருந்து காளையார்கோவில் அருகே ஆண்டிச்சியூரணி வரையிலும், கடந்த 2013ல் ஆண்டிச்சியூரணியிலிருந்து, தொண்டி வரை சாலைபோடும் பணி நடந்து முடிந்தது. சாலையின் இருபுறமும் மேலும் தலா 1.5 மீக்கு அகலப்படுத்தப்படும் பணி 2015ம் ஆண்டு நடந்தது. இதில் ஏற்கனவே இருந்த சாலை முற்றிலுமாக அகற்றப்பட்டு அதன் மீது மண், கற்கள், கான்க்ரீட் கலவை போடப்பட்டு உயரப்படுத்தப்பட்டது. சிவகங்கையிலிருந்து, சருகணி வரை உள்ள சாலையில் பல இடங்களில் தரையிலிருந்து சாலை சுமார் 5 அடி முதல் 8 அடிக்கு மேல் உயரமாக காணப்படுகிறது.
சாலை விரிவாக்க பணியின்போது சிவகங்கையிலிருந்து சருகணி வரை பல்வேறு இடங்களில் உள்ள அபாயகரமான வளைவுகளை அகற்றி சாலைகளை நேராக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. ஆனால் அவ்வாறு செய்யப்படவில்லை. கண்டனிப்பட்டி கண்மாய் வளைவு, காட்டுக்குடியிருப்பு அருகே உள்ள நவ்வாக்கண்மாய் வளைவு, பையூர் அரைக்காசு காளியம்மன் கோயில் அருகேயுள்ள வளைவு, கண்டனிப்பட்டி கண்மாய் வளைவு உள்ளிட்ட பல்வேறு சாலை வளைவுகள் சரிசெய்யப்படவில்லை. இந்த வளைவுகள் அபாயகரமானதாகும். இந்த வளைவுகளில் சாலை தரைத்தளத்தைவிட பல அடி உயரமாக காணப்படுகிறது. குறிப்பாக நவ்வாக்கண்மாய் வளைவில் சாலைக்கும், தரைக்குமான உயரம் சுமார் 8 அடி உள்ளது. வளைவுகளில் சிறிதுகட்டுபாட்டை இழந்தாலும் வாகனங்கள் பள்ளத்திற்குள் செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனால் லாரி, வேன், கார், டூவீலர் என அனைத்து வாகனங்களும் விபத்தில் சிக்குகின்றன. இந்த வளைவுகளில் சாலையோரத்தில் கம்பி தடுப்புகள் அமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து வாகனஓட்டிகள் கூறியதாவது, ‘மதுரை, தொண்டி சாலை விரிவாக்க பணியின்போது வளைவுகளை அகற்ற ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரியவில்லை. பல ஆண்டுகளாக தொடர்ந்து நடந்த விபத்துகளை கணக்கில் கொண்டு வளைவுகளை அகற்றியிருக்க வேண்டும். இல்லாதபட்சத்தில் உயிர்ச்சேதத்தை தடுக்கும் வகையில் வளைவுகள் உள்ள தூரத்திற்கு கம்பி தடுப்புகள் அமைத்திருக்க வேண்டும். சருகணி, தேவகோட்டை சாலையில் பல வளைவுகளில் இதுபோல் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் சிவகங்கை, தொண்டி சாலையில் ஒரு வளைவில் கூட தடுப்புகள் அமைக்கப்படவில்லை. இந்த சாலையில் புதிததாக வருபவர்கள் திடீரென வரும் இந்த வளைவுகளை எதிர்பாராமல் கட்டுப்பாட்டை இழந்துவிடுவதால் வாகனங்கள் பள்ளத்துக்குள் கவிழ்கிறது. எனவே நெடுஞ்சாலைத்துறையினர் வளைவுகளை அகற்றவோ அல்லது தடுப்புகள் அமைக்கவோ நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.