கோபாலப்பட்டிணத்தில் வெளுத்து வாங்கிய மழை..! கடற்கரை , ஈத்கா மைதானத்தில் குளம் போல் தேங்கிய மழை நீர்…!!
வெப்பச்சலனம் காரணமாக கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
புதுக்கோட்டை மாவட்டம் கடற்கரை கிராமமான கோபாலப்பட்டிணம், மீமிசல் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் 06-11-2020 வியாழக்கிழமை அதிகாலை பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிா்ந்த சூழல் நிலவியது
புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக சீதோஷ்ண நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்த மழை தொடர்ந்து ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்து கொட்டித்தீர்த்தது. இந்த மழையினால் இரவில் குளிர்ந்த சீதோஷ்ண நிலை காணப்பட்டது.
GPM கடற்கரை, ஈத்கா மைதானம்
கோபாலபட்டிணத்தில்முக்கிய பகுதிகளிலான.கடற்கரை, ஈத்கா மைதானம் போன்ற இடங்களில் மழை நீர் குளம் போல் தண்ணீர் தேங்கி நின்றது. இதனால் இடமே வெள்ளகாடாக காட்சியளித்தது.
முக்கிய பகுதிகளில் உள்ள சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடியது. நீா்வரத்து ஓடைகளில்,தாழ்வான பகுதியில் குளம் போல் தண்ணீர் தேங்கி நின்றது.
மழையால் வெப்பம் தணிந்து குளிா்ந்த சூழல் நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்..தொடர்ச்சியாக வெயில் வாட்டி வந்த நிலையில், திடீரென பெய்த இந்த மழை மண்ணை மட்டுமின்றி கோபாலப்பட்டிணம் மக்களின் மனதையும் குளிர வைத்து சென்றது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.