மீமிசல் சுற்றுவட்டார மக்களுக்கு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் கோபாலப்பட்டிணம் கிளை சார்பாக பேரிடர் குழு அமைப்பு…!



தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மீமிசல் சுற்றுவட்டார மக்களுக்கு கோபாலப்பட்டிணம் கிளை சார்பாக பேரிடர் குழு அமைக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், கோபாலபட்டினம் கிளை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம்  சார்பில் பேரிடர் குழுவை அமைத்தனர்.குழுவில் உள்ளவர்களின் தொலைபேசி எண்களை ஆவுடையார்கோவில் தமுமுக ஒன்றிய செயலாளர்  அப்துல் சுக்கூர் அவர்கள்   அறிவித்தார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது,நிவர் புயலை எதிர்கொள்ள அனைத்துவகை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம்.எந்தவித அவசர தேவைகளுக்கும் கீழ்க்கண்ட குழுவினரை தொடர்பு கொள்ளலாம்.மேலும் அரசின் ஆலோசனைகளுடன் இணைந்து செயலாற்றிடுவோம் என்று கூறினார்.

உதவி எண்கள்:-

முகமது மசூது       : 9787960630
 முபாரக்                     : 8012689166
ஹிதாயத்துல்லா: 8883438963
சாகுல் ஹமீது        : 7639934561

அவசர மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்கு உடனே அணுகவும்.

தமிழகம் முழுவதும் தயார் நிலையில் நாங்கள் இருக்கின்றோம். நீங்கள் அச்சம் தவிர்த்தும்,  அலட்சியம் இன்றியும் இருங்கள்.!

மேலும் தொடர்புக்கு:-
அப்துல் சுக்கூர் 9790282250

மீமிசல் சுற்றுவட்டார  மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை..!

  • பழைய கட்டிடங்களில் தங்கவோ  அருகில் செல்லவோ வேண்டாம்.
  • மரத்தின் அடியிலோ,  திறந்த வெளியில் நிற்க வேண்டாம்.
  • வெளியில் செல்வதை தவிர்க்கவும் அப்படி வெளியில் போகும் சூழல் ஏற்பட்டால் போகும்போது குடை போன்றவையை பயன்படுத்தவும்.
  • உணவுப் பொருட்களை இருப்பு வைத்துக்கொள்ளுங்கள்.

மீமிசல் சுற்றுவட்டார பொதுமக்கள் மிக அவசர தேவைகளுக்கு.

கோபாலப்பட்டிணம்  கிளை தமுமுக பேரிடர் மீட்பு குழு மற்றும் ஆம்புலன்ஸ் தொடர்பு எண்
9787960630, 8012689166, 8883338963, 7639934561, 9790282250.

தகவல்:
தமுமுக பேரிடர் மீட்புக்குழு
கோபாலப்பட்டிணம் கிளை 
புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம்

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments