திருச்சி விமான நிலைய புதிய முனைய கட்டுமான பணிகள் 2022-ம் ஆண்டில் நிறைவடையும் என இந்திய விமானநிலைய ஆணையக் குழுமத்தின் தென்மண்டல பொறியியல் பிரிவு செயல் இயக்குநர் சஞ்ஜீவ் ஜிண்டல் தெரிவித்தார்.
திருச்சியில் நேற்று முன்தினம் அவர் அளித்த பேட்டி:
திருச்சி விமான நிலையத்தில் ரூ.950 கோடியில் புதிய முனையம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் 50 சதவீத பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளன.
கரோனா பொதுமுடக்கத் தின்போது பணிகள் சற்று தாமதமடைந்தன. தற்போது பணிகள் விரைவுபடுத்தப்பட உள்ளன. இத்திட்டத்துக்கென 38.69 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத் தப்பட்டுள்ளன.
இதில் 13.26 ஏக்கர் ராணுவப் பகுதிக்குட்பட்டது. வான் போக்குவரத்து கோபுரம் அமைப்பதற்கு சில இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
தடையில்லாச் சான்று பெறும் முயற்சிகளும் நடைபெற்று வருகின்றன. வரும் 2022-ம் ஆண்டில் புதிய முனையப் பணிகள் நிறைவுபெற்று பயன்பாட்டுக்கு வரும் என்றார்.
முன்னதாக புதிய முனைய கட்டுமானப் பணிகளை பார்வை யிட்டு ஆய்வு செய்தார். அப்போது விமானநிலைய இயக்குநர் தர்மராஜ், கட்டுமான பிரிவு பொது மேலாளர் கிருஷ்ணா உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.