விமானநிலையங்களில் பிரமாண்ட தேசிய கொடி கம்பம் அமைக்கப்பட்டு அதில் தேசிய கொடி கம்பீரமாக பறந்து வருகிறது.
இதேபோல ரெயில் நிலையங்களிலும் பிரமாண்ட தேசிய கொடி அமைக்க ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி தமிழகத்தில் ஆங்காங்கே ரெயில் நிலையங்களில் பெரிய கொடி கம்பங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் கரூரில் ரெயில் நிலையம் முன்பு திறந்து வைக்கப்பட்டதில் தேசிய கொடி பட்டொளி வீசி பறக்கிறது.
இதேபோல புதுக்கோட்டை ரெயில் நிலையம் முன்பு பிரமாண்ட தேசிய கொடி கம்பம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கி உள்ளது. ரெயில் நிலைய வளாகத்தில் மண் தோண்டப்பட்டு அஸ்திவாரம் அமைக்கப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து ராட்சத இரும்பு குழாயில் கம்பம் பொருத்தப்பட்டு அதில் தேசிய கொடி பறப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. இந்த பணிகள் விரைவில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சந்திப்பு ரெயில்நிலையமாக...
இதற்கிடையில் புதுக்கோட்டை ரெயில் நிலையத்தை சந்திப்பு ரெயில் நிலையமாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் ரெயில் நிலையத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும் வேண்டுகோள்வைத்துள்ளனர். தற்போது சிறப்பு ரெயில்கள் மட்டும் இயக்கப்பட்டு வருகிற நிலையில் ரெயில்களில் பார்சல் முன்பதிவுக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இரு சக்கர வாகனங்கள் மற்றும் இதர பொருட்கள் முன்பதிவு செய்து பார்சலில் அனுப்பலாம் என ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.