கோட்டைப்பட்டினம் மீனவர்கள் 4 பேர் இலங்கை கடற்படையால் கைது.!



கோப்புக்காட்சி
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த 4 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கைது செய்யப்பட்டனா்.

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த கான்ஸ்டன்ட் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் அதே பகுதியைச் சோ்ந்த ரமேஷ், பாண்டு, மோகன் ஆகிய 4 பேரும் கோட்டைப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து சனிக்கிழமை கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனா்.

நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த இவர்களை, அங்கு வந்த இலங்கைக் கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கைது செய்தனர்.

பின்னா், 4 பேரையும் காரைநகரிலுள்ள கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்ட அவா்கள் 4 பேரையும் அங்கு தங்க வைத்துள்ளனர். 

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments