குறைந்தபட்ச மாத உதவித்தொகையாக ரூபாய் 3 ஆயிரம் வழங்க வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் இன்று புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குறைந்தபட்ச மாத உதவித்தொகையாக ரூபாய் 3 ஆயிரம், கடுமையாக ஊனமுற்றோருக்கு ரூபாய் 5 ஆயிரமும் வழங்க வேண்டும். தனியார்துறை பணிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் சட்டம் இயற்ற வேண்டும்.
அரசின் பின்னடைவு காலிப்பணியிடங்களை கண்டறிந்து 3 மாதத்தில் நிரப்ப வேண்டுமென்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பினை வெளிப்படையாக அறிவிக்க வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்துக்கு தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் உதவியாளர்கள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் கே.சண்முகம் தலைமை வகித்தார்.
மாவட்டப் பொருளாளர் ஜி.கிரிஜா, துணைச் செயலாளர் எம்.கணேஷ், துணைத் தலைவர் ஏ.சண்முகராஜா, நகரத்தலைவர் ராமகிருஷ்ணன், செயலாளர் கணேஷ் மற்றும் நிர்வாகிகள் ஹாட்சாபாய், ரமேஷ், சீனி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.