கோட்டைப்பட்டினம் பகுதியில் செல்போன் கடை நடத்தி வருபவர் உமர் (வயது 24). இவரது கடையில் கடந்த 2-ந்தேதி ரூ.2 லட்சம் மதிப்பிலான செல்போன்களை மர்மநபர்கள் திருடி சென்றுவிட்டனர்.
இதனையடுத்து இவர்களை பிடிக்க கோட்டைப்பட்டினம் துணை போலீஸ் சூப்பிரண்டு சிவராமன், இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சாமுவேல் ஞானம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. திருட்டு ஆசாமிகள் தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் பகுதியில் ஒரு லாட்ஜில் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து போலீசார் விரைந்து சென்று அங்கு இருந்த 5 பேரை பிடித்தனர். விசாரணையில் அவர்கள் கடலூர் மாவட்டத்தை மூர்த்தி (32), ராமேசுவரம் பகுதியை சேர்ந்த கோட்டைமணி (45), பூம்பூகார் பகுதியை சேர்ந்த அகத்தியன் (22), திருகடையூர் பகுதியை சேர்ந்த ராவணன் (24) ,தொண்டி புதுக்குடியை சேர்ந்த புரட்சிக் கண்ணன் (35) என தெரிய வந்தது.
இதனையடுத்து போலீசார் 5 பேரையும் கைது செய்து செல்போன்களை கைப்பற்றினர். பின்னர் இருவரையும் அறந்தாங்கி கோர்ட்டில்ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். செல்போன் திருட்டு கும்பலை பிடித்த போலீசாருக்கு வர்த்தக சங்கத்தினர், பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.