அறந்தாங்கி அருகே அமரசிம்மேந்திரபுரம் பாதுகாப்பு மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களை கலெக்டர் உமாமகேஸ்வரி நேற்று பார்வையிட்டு அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.
அப்போது அவர் கூறுகையில், “மாவட்டத்தில் பொதுமக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள முகாம்களில் உணவு உள்பட அனைத்து அடிப்படை வசதிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மழையினால் அறந்தாங்கி வருவாய் கோட்டத்தில் 20 இடங்களில் மின் தடை ஏற்பட்டதை உடனடியாக சரிசெய்யப்பட்டன.
மாவட்டத்தில் மழையினால் சேதமடைந்த 118 வீடுகளின் உரிமையாளர்களுக்கும், மழையினால் சிறு காயமடைந்த 2 பேருக்கும், இறந்த 12 கால்நடைகளின் உரிமையாளர்களுக்கும் நிவாரணம் வழங்கப்படும்.
இதேபோல மீனவர்களுக்கும் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பருவமழையினால் மாவட்டத்தில் நீர்நிலைகளில் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்து வருகிறது” என்றார்.
அப்போது சப்-கலெக்டர் ஆனந்த்மோகன், வேளாண்மைத்துறை உதவி இயக்குனர் பாஸ்கரன், மின்சார வாரிய மேற்பார்வை செயற்பொறியாளர் செந்தில்குமார், தாசில்தார் மார்டின் லூதர் கிங் உள்பட அதிகாரிகள் உடன் இருந்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.