பாபரி மஸ்ஜித் நிலத்தை முஸ்லிம்களிடம் திருப்பிக் கொடு!
பாபரி மஸ்ஜிதை இடித்த குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கிடு!
1991 வழிபாட்டுத்தலங்கள் சட்டத்தை நடைமுறைப்படுத்து!
ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் மீமிசல் நகரில், SDPI (எஸ்டிபிஐ) கட்சி சார்பாக பெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி தலைவர் N.M.ஹனிபா அவர்கள் தலைமை தாங்கினார்கள்.
இக்கூட்டத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் ஏரியா பிரசிடென்ட் SRM ஷர்புதீன் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தி சிறிய உரை நிகழ்த்தினார்கள்.
எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட துணை தலைவர் SAM அரபாத் அவர்கள் தலைமை உரை நிகழ்த்தினார்கள்.
இப்போராட்டத்தில் ஆல் இந்தியா இமாம் கவுன்சில் மாநில பொதுச்செயலாளர் அர்ஷத் அகமது அல்தாஃபி அவர்களும், அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி அனைத்து ஜமாத் கூட்டமைப்பின் தலைவர் NSM.நஜ்முதீன் அவர்களும் கண்டன உரை நிகழ்த்தினார்கள்.
இறுதியாக மீமிசல் கிளை தலைவர் யாசின் அவர்கள் நன்றியுரையாற்றினார்.
இக்கூட்டத்தில் 200க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் பெரும் திரளாக கலந்துகொண்டு போராட்டத்தை வெற்றியடையச் செய்த அனைத்து பெண்கள், ஆண்கள், தாய்மார்கள், எஸ்டிபிஐ கட்சியின் உறுப்பினர்கள், செயல்வீரர்கள், நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
இவன்:
சேக் பரிது,
கோபாலபட்டினம் கிளை செயலாளர்,
SDPI கட்சி,
புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.