புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு ரத்து செய்யக்கோரி புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகம்முன் 14ம் தேதி முதல் மூன்று நாட்கள் காத்திருப்பு போராட்டம் நடத்துவது என்று விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. புதுக்கோட்டையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு, விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் சோமையா தலைமை வகித்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் மாதவன், விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ராமையன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு ரத்து செய்யக்கோரி டிச.14ம் தேதியிலிருந்து 16ம் தேதி வரை ஆட்சியர் அலுவலகம் முன்பாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவது என முடிவு எடுக்கப்பட்டது. இதில் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர் .
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.