புதுக்கோட்டையில் கடந்த சில நாட்களாக தொடர் மழையின் காரணமாக நகரின் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் சீராக செல்வதில் தடைப்பட்டு வந்தன.
தொடர்ந்து மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரி உத்தரவின் பேரில், புதிய பஸ் நிலையம் அருகே காட்டுபுதுக்குளம் வாய்க்கால், சந்திரமதி வாய்க்கால் உள்ளிட்ட பல பகுதிகளில் தண்ணீர் வெளியேற்றும் பணியை நகராட்சி ஆணையர் (பொறுப்பு) ஜீவாசுப்பிரமணியன் தலைமையில் பணியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
குன்னான்குளம் பகுதிகளில் இருந்து வெளியேறிய தண்ணீர் சாலையிலும், குடியிருப்பு பகுதிகளிலும், தாழ்வான பகுதிகளில் சூழ்ந்துள்ளது. இதனால் இரவு நேரங்களில் விஷ பூச்சிகள் இருப்பதாக அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நகராட்சி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
அதை தொடர்ந்து நேற்று காலை குளத்தின் கலிங்கி பகுதிகளில் தண்ணீர் வெளியேற்றும் நடவடிக்கையை நகராட்சி நிர்வாகம் மேற்கொண்டது. இதையடுத்து குடியிருப்பு பகுதிகளில் சூழ்ந்திருந்த தண்ணீர் வடிய தொடங்கியது. ம
ழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் அத்துமீறி இடையூறு விளைவிப்பதாக தெரிய வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையர் ஜீவா சுப்பிரமணியன் எச்சரித்துள்ளார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.