அறந்தாங்கி கட்டுமாவடி முக்கம் ரயில்வே கேட் வருகிற டிச-15 மூடல்: போக்குவரத்து மாற்றம்



பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் கவனத்திற்கு, கட்டுமாவடி ரோடு, நூர் மஹால் அருகில் அமைந்துள்ள லெவல் கிராசிங் எண் 155 (Level Crossing No: 155) ஆனது பராமரிப்புப் பணிகளுக்காக வருகிற 15.12.2025 (திங்கட்கிழமை) தற்காலிகமாக மூடப்பட இருப்பதாக இரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

வருகிற 15.12.2025 (திங்கட்கிழமை) காலை 8:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை
ரயில்வே கேட்டில் அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இந்த 12 மணி நேர காலப்பகுதியில் ரயில்வே கேட் முழுமையாக மூடப்பட்டிருக்கும் என்பதால், அவ்வழியாகச் செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மாற்றுப் பாதைகளைப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பயண நேர தாமதங்களைத் தவிர்க்க முன்கூட்டியே திட்டமிடுமாறு தெற்கு ரயில்வே அறிவுறுத்தியுள்ளது.
இந்த அறிவிப்பு உத்தரவின்படி, தெற்கு இரயில்வே நிர்வாகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments