ஜனவரி மாதம் 17-ந் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற உள்ளதாகவும், இதில் 1½ லட்சம் குழந்தைகளுக்கு வழங்கப்பட உள்ளதாக கலெக்டர் உமாமகேஸ்வரி தெரிவித்தார்.
தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்துவதற்கான மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் உமாமகேஸ்வரி தலைமை தாங்கி பேசியதாவது:-
நாடு முழுவதும் வருகிற ஜனவரி மாதம் 17-ந் தேதி தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமை புதுக்கோட்டை மாவட்டத்தில் பாதுகாப்பான முறையில் சமூக இடைவெளியை கடைப்பிடித்து நடத்தப்பட உள்ளது. சுகாதாரத்துறை மூலம் போலியோ சொட்டு மருந்து முகாமினை உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் தொண்டு நிறுவனங்களை ஒருங்கிணைத்து பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
1, 356 மையங்கள்
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊரக பகுதிகளில் 1, 309 மையங்களும், நகரப்பகுதிகளில் 47 மையங்களும் என மொத்தம் 1, 356 மையங்களில் 1 லட்சத்து 66 ஆயிரத்து 712 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது.
இப்பணியை பாதுகாப்புடன் மேற்கொள்வதற்கென பணியாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் மொத்தம் 5, 638 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். எனவே புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 0 முதல் 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் தவறாமல் போலியோ சொட்டு மருந்து கொடுப்பதுடன் ‘இளம்பிள்ளைவாத நோயை ஒழித்து இளம்பிள்ளைவாத நோய் இல்லா உலகம் படைக்க” அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் பூவதி, பொதுசுகாதார துணை இயக்குனர்கள் கலைவாணி, விஜயகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments