புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் கிழக்கு கடற்கரை சாலையில் ஓய்வு எடுக்கும் கால்நடைகளால் வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகின்றனர்.
சென்னையில் இருந்து கண்ணியாகுமரிக்கு கடற்கரை மாவட்டங்கள் வழியாக செல்ல முக்கிய சாலையாக நாகப்பட்டினம் - தூத்துக்குடி கிழக்கு கடற்கரை சாலை விளங்கி வருகிறது. மாநில சாலையான இந்த சாலையில் உள்ள முக்கிய ஊராக மீமிசல் உள்ளது.
மூன்று முக்கிய சாலையை சந்திக்கும் பகுதியாக உள்ள மீமிசல் வழியாக தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. மருத்துவமனை, வங்கி உள்ளிட்ட பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த அலுவலகங்கள் இங்கு உள்ளதால், ஏராளமான பொதுமக்களும் இங்கு வந்து செல்கின்றனர்.
மீமிசல் கிழக்கு கடற்கரை சாலையில் ஏராளமான கால்நடைகள் சாலையில் சுற்றி திரிகின்றன. இவ்வாறு சுற்றித்திரியும் கால்நடைகளால் அவ்வப்போது விபத்துகள் நேரிடுகின்றன.
இதுபோன்ற விபத்துக்களில் உயிரிழப்புகளும் நிகழ்ந்துள்ளன. இரவு நேரங்களில் மீமிசல் கிழக்கு கடற்கரை சாலை வழியாக ஏராளமான வாகனங்கள் சென்று வரும் நிலையில் கால்நடைகள் சாலையின் மையப்பகுதியில் படுத்து ஓய்வு எடுப்பதால், வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது.
சாலையில் கால்நடைகள் சுற்றித்திரிவதால், இந்த முக்கியத்துவம் வாய்ந்த கிழக்கு கடற்கரை சாலை வழியாக வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துடனே சென்று வருகின்றனர்.
எனவே மாவட்ட நிர்வாகமும், மீமிசல் ஊராட்சி நிர்வாகமும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், வாகன ஓட்டுனர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.