கோபாலப்பட்டிணத்தில் வானம் மேகமூட்டத்துடன் பெய்த சாரல் மழை.!!



தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் தொடங்கியது. பருவமழை தொடங்கியதில் இருந்து தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம்  ஆவுடையார் கோவில் தாலுகா நாட்டானி புரசக்குடி ஊராட்சி மீமிசல்  அருகே உள்ள கடற்கரை கிராமமான கோபாலப்பட்டிணத்தில் நேற்று டிசம்பர் 15 செவ்வாய் கிழமை பிற்பகல் 12 மணியிருந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. 

மதியம் 2 மணிக்கு மேல் மழை பெய்ய தொடங்கியது.

இந்த மழை தொடர்ந்து தூறியபடியே இருந்தது. அவ்வப்போது இடையில் லேசாக விட்டு விட்டு பெய்தது. வானில் மேகம் இருள் சூழ்ந்து காணப்பட்டது. 

தொடர்ந்து பெய்து வரும் மழையால் கோபாலப்பட்டிணத்தில் அவ்வப்போது கரு மேகங்கள் சூழ்ந்து கும்மிருட்டாய் காட்சியளித்து மலைப்பிரதேசம் போல அதிகமான குளிர் நிலவி வருகிறது.

இந்த மழையின் காரணமாக குளிர்ந்த காற்று வீசியதால்  குழந்தைகள் வயதானவர்கள்  மற்றும் பொதுமக்கள் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments