புதுக்கோட்டையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொதுக்குழு கூட்டம்.!!



இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் புதுக்கோட்டை மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அக்கட்சியின் மாநில தலைவர் அப்துல் ரகுமான் ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி உள்பட பலர் கலந்து கொண்டனர் கூட்டத்துக்கு பின்னர்  அக்கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் அப்துல் ரகுமான் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் திமுக கூட்டணியில் தான் அங்கம் வகிக்கிறது திமுக கூட்டணியை வரும் சட்டமன்றத் தேர்தலில் அடுத்த ஆட்சி அமைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுப்பது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

தெலுங்கானா மற்றும் பீகார் சட்டமன்ற தேர்தலில் இஸ்லாமிய அமைப்பான ஒய்.சி அமைப்பு போட்டியிட்டதைப்போல் தமிழகத்திலும் வரும் சட்டமன்றத் தேர்தலில் ஒய்.சி அமைப்பு  போட்டியிடக் கூடும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதனால் சிறுபான்மையினர் ஓட்டு  பிரியும் என்று பாஜக நினைத்து பின்புறமாக நின்று இயக்குகிறது. ஆனால் தமிழகத்தில் இது எடுபடாது.

அவர்கள் நிற்பதால் சிறுபான்மையினர் வாக்கு சிதறாது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று இந்த கூட்டம் வலியுறுத்துகிறது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு  15 தொகுதிகள் சாதகமாக உள்ளது என்று கண்டறியப்பட்டுள்ளது. இருப்பினும் எவ்வளவு தொகுதிகளில் போட்டியிடுவது என்பது முக்கியமல்ல.   பேச்சுவார்த்தையின் போது உரிய இடங்களை நாங்கள் கேட்டுக்  பெறுவோம். ஆனால் பாஜக கூட்டணியை வீழ்த்துவது தான் எங்களுடைய ஒரே குறிக்கோளாக இருக்கும்.

நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமலஹாசன் அரசியல் கட்சி தொடங்குவதால் திமுக கூட்டணிக்கு எந்த பாதிப்பும் கிடையாது அவர்கள் பின்னால் அவருடைய ரசிகர்கள் தான் செல்வார்கள் தவிர வாக்காளர்கள் செல்ல மாட்டார்கள் என்றார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments