புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு அருகே உள்ள சிக்கப்பட்டியில் ரேஷன் கடை உள்ளது. இங்கு பொருட்கள் வாங்க கிராம மக்கள் வந்திருந்தனர். அப்ேபாது ரேஷன் கடையில் உள்ள பயோமெட்ரிக் எந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால், பொருட்கள் வழங்க முடியாத நிலை ஏற்பட்டது.
இதனால், ரேஷன் பொருட்கள் வாங்க காலையில் வந்த பொதுமக்கள் மாலை வரை காத்திருந்தும் எந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு சரி செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் உடனடியாக தங்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி ஆலங்குடி-பட்டுக்கோட்டை சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தை
இதுகுறித்து தகவல் அறிந்த வடகாடு போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
தங்களுக்கு ரேஷன் பொருட்கள் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என அவர்கள் உறுதி அளித்ததை தொடர்ந்து சாலை மறியல் கைவிடப்பட்டது. இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.