புதுக்கோட்டை மாவட்டத்தில் காணொலிக்காட்சி வாயிலாக விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 30 ஆம் தேதி நடைபெற உள்ளது.




புதுக்கோட்டை மாவட்டத்தில் காணொலிக்காட்சி வாயிலாக விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 30 ஆம் தேதி நடைபெற உள்ளது.



இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் உமாமகேஸ்வரி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது. புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 30 ஆம் தேதி  புதன்கிழமை அன்று காலை 11 மணியளவில் காணொலிக்காட்சி மூலம் zoom App Google Meet ல் நடைபெற உள்ளது.

புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் இக்கூட்டத்தில் காணொலிக்காட்சி வாயிலாக கலந்துகொள்ளும் வண்ணம் அனைத்து வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகங்களிலும் தகுந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.     எனவே, புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் அந்தந்த வட்டாரங்களில் உள்ள வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்  அலுவலகங்களை தொடர்பு கொண்டு  காணொலிக்காட்சி மூலம் இக்கூட்டத்தில் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளிவிட்டு கலந்து கொண்டு விவசாயம் தொடர்புடைய கோரிக்கைகளை மட்டும் தெரிவித்து பயனடையலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் உமாமகேஸ்வரி விடுத்துள்ள செய்திக்குறிப்பில்  இத்தகவலை  தெரிவித்துள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments