உலமாக்கள் உதவித்தொகையை ரூ.5000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு முன்னாள் வக்பு வாரிய தலைவர் கடிதம் எழுதியுள்ளார். முன்னாள் வக்பு வாரிய தலைவர் செ.ஹைதர் அலி தமிழக அரசுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: உலகம் முழுவதும் கொரோனா தொற்று காரணமாக மக்கள் பாதிக்கப்பட்டு வரும் சூழ்நிலையில், தமிழகத்தில் அரசு கொரோனா தொற்றை கட்டுக்குள் கொண்டு வந்து இருப்பதை பாராட்டுகிறேன்.
கொரானாவால் பாதிக்கப்பட்ட அடித்தட்டு மக்கள் அனைவருக்கும் குடும்பம் ஒன்றிற்கு பொங்கல் பரிசாக ரூ.2500 வழங்க உத்தரவிட்டது. புனித யாத்திரை செல்லும் கிறித்தவர்களுக்கு சலுகைகளை உயர்த்தி வழங்கியது. கிராமப்புற கோயில் பூசாரிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை உயர்வு என தொடர்ந்து சில மக்கள் நல அறிவிப்புகளை தமிழக அரசு செய்து வருகிறது. எம்மதமும் சம்மதம் என்ற வகையில் தமிழ்நாட்டில் தமிழ்நாடு
வக்பு வாரியத்தின் மூலமாக நலிந்த உலமா பெருமக்களுக்கான உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
வக்பு வாரியத்தின் மூலமாக நலிந்த உலமா பெருமக்களுக்கான உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
இந்த தொகை தற்போதைய விலைவாசி நிலையை கருத்தில் கொள்ளும் போது போதுமானதாக இல்லை. எனவே தமிழக அரசு உலமாக்கள் உதவித்தொகையை ரூ.5000 உயர்த்தி வழங்கிட ஆவன செய்ய வேண்டும். மேலும் உலமாக்கள் உதவித்தொகைக்காக விண்ணப்பித்துள்ள தகுதியான நபர்கள் அனைவருக்கும் உதவித்தொகை கிடைத்திட ஆவன செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.