புதுக்கோட்டை மாவட்ட கடல் பகுதியில் செயற்கை பவள பாறைகளை பதிக்க இடங்களை தேர்வு செய்யும் பணிகள் நிறை வடைந்துள்ளன.
செயற்கை பவளப்பாறை மீன்கள் மற்றும் கடலிலுள்ள இதர உயிரினங்களுக்கு வாழ் விடமாகவும், இனப்பெருக்க தளமாகவும் விளங்கி வருகிறது. எனவே, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங் களின் கடல் பகுதியில் செயற்கை பவள பாறைகளை பதிக்க மீன்வளத்துறை முடிவு செய்தது.
இதை தொடர்ந்து, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் 30 இடங்களில் கடந்த ஆகஸ்ட்டு மாதம் செயற்கை பவள பாறைகள் பதிக்கும் பணிகள் தொடங்கின. 45 நாட்களில் செயற்கை பவள பாறைகள் பதிக்கும் பணிகள் நிறைவடைந்தன.
இதனை தொடர்ந்து, புதுக்கோட்டை மாவட்ட கடல் பகுதியில் செயற்கை பவள பாறைகள் பதிப்பதற்கு சாதகமான இடங்களை தேர்வு செய்யும் பணியில் மத்திய கடல் சார் ஆராய்ச்சி நிறுவனத்தின் மூலம் விஞ்ஞானிகள் தலைமை யிலான குழுவினர் ஈடுபட்டு வந்தனர். இப்பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளன.
இது தொடர்பாக, மீன்வளத் துறை அதிகாரி ஒருவர் கூறிய தாவது: புதுக்கோட்டை மாவட்ட கடல் பகுதியில் 10 இடங்கள் செயற்கை பவள பாறைகள் பதிப்பதற்கு சாதகமான இடங் களாக தேர்வு செய்யப்பட்டுள்ளன. செயற்கை பவள பாறைகள் வடி வமைக்கும் பணிகளும் நிறை வடைந்துவிட்டன.
எனவே, விரைவில் புதுக் கோட்டை மாவட்ட கடல் பகுதியில் செயற்கை பவள பாறைகள் பதிக்கும் பணி தொடங்கப்படும். இப்பணிகள் முடிந்தவுடன் ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்ட கடல் பகுதிகளில் அடுத்தடுத்து செயற்கை பவள பாறைகள் பதிக் கும் பணிகள் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.