பெற்றோர்கள் குழந்தைகளின் தடுப்பூசி அட்டையை ஏன் கட்டாயமாக புதுப்பித்து வைத்துக் கொள்ள வேண்டும்?




புதிதாக குழந்தை பிறப்பது பெற்றோர்களுக்கு உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் தரக்கூடிய நேரம்.  பல மாத காத்திருப்புக்குப் பின் அவர்களுடைய கைகளில் குழந்தையை ஏந்திய தருணத்தில் இருந்து இந்த குழந்தையின் தேவை என்னவோ அதுவே தங்களுடைய வாழ்க்கையாகக் கருதுவார்கள். ஆனால் இதற்கிடையில் சில பெற்றோர்கள் தாங்கள் செய்ய வேண்டிய சில பொறுப்பான விஷயங்களைச் செய்ய தவறிவிடுகிறார்கள்.  குழந்தைகளுக்கு நிறைய தேவைகள் உள்ளன, குறிப்பாக அவர்களின் உடல்நலம் என்று வரும்போது தடுப்பூசி போன்றவற்றை திட்டமிடுவதில் கவனமாக இருப்பதில்லை. குழந்தைப் பருவத்தில் போடப்படும் தடுப்பூசி மற்றும் நோய்த்தடுப்பு மருந்துகள் சரியான நேரத்தில் போடுவது புதிய பெற்றோர்களுக்கு அது பெரிய சுமையாகத் தோன்றுகிறது. 

உங்கள் குழந்தையின் அனைத்து வகையான பாதுகாப்பையும் உறுதி செய்வதற்கான முதல் படிகளில் ஒன்றாக தடுப்பூசிக்கு முன்னுரிமை அளிப்பது முக்கியம். வாழ்க்கையின் ஆரம்ப ஆண்டுகளில், ஒரு குழந்தையின் நோயெதிர்ப்பு அமைப்பு வளர்ச்சியடைந்து கொண்டிருக்கும், இது அவர்களை நிறைய நோய்களுக்கு ஆளாக்கும். சரியான நேரத்தில் சரியான தடுப்பூசிகளை வழங்குவது என்பது பல கடுமையான நோய்களுக்கு எதிராக வேலை செய்யும். அடுத்தடுத்த முறையாக புதுப்பிக்கப்பட்ட தடுப்பூசிகளைப் போடும்போது சில அசௌகரியங்கள் இருக்கும். அது குழந்தைகளுக்கு மட்டுமல்ல, அவர்களைச் சுற்றியுள்ள அனைவருக்குமே ஏற்படும். 

தடுப்பூசிகளைக் கண்காணித்தல்
பொதுவாக குழந்தைகளுக்குப் போடப்படும் தடுப்பூசிகள் பிறந்தது முதல் 6 வயதிற்குள்ளாகவே போடப்பட்டுவிடும். சில தடுப்பூசிகள் மட்டும் ஒன்றுக்கு மேற்பட்ட தடவை வெவ்வேறு வயதுகளில் போட வேண்டியிருக்கும். அவை இணை தடுப்பூசிகளாகவும் இருக்கலாம். அதனால் குழந்தையின் தடுப்பூசி குறித்த ரிப்போட்டுகளை கவனமாக வைத்திருக்க வேண்டியது அவசியம். சில சமயங்களில் உங்களுடைய மருத்துவர்கள் மற்றும் நீங்கள் வழக்கமாகச் செல்லும் மருத்துவமனைகளே இதுபோன்ற விவரங்களைத் தொடர்ந்து கண்காணிக்கிறார்கள். ஒருவேளை நீங்கள் மருத்துவரையோ மருத்துவமனையையோ மாற்றுகிறீர்கள் அல்லது வேறு இடங்களுக்கு குடிபெயர்கிறீர்கள் என்றால் உங்களுடைய குழந்தையின் தடுப்பு மருந்துகள் கொடுக்க வேண்டிய அட்டவணை மற்றும் ரெக்கார்டுகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டியது நீங்கள் தான். 


தடுப்பூசி அட்டை: குழந்தை ஆரோக்கியமாக இருப்பதற்கான கடவுச்சீட்டு
நீங்கள் குழந்தைகளுக்குத் தடுப்பூசி செயல்முறையை எளிதாக்குவதற்கும், பெற்றோர்கள் தங்கள் குழந்தையின் நோய்த்தடுப்பு அட்டவணையை முறையாகக் கண்காணிக்கவும் தடுப்பூசி அட்டை வைத்திருப்பது அவசியம். தடுப்பூசி அட்டைகள் தடுப்பூசி தேதிகள் மற்றும் அளவு பற்றிய தகவல்களைக் கொண்ட பயனுள்ள சுகாதார பதிவுகள் போன்றவற்றை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டியதன் அவசியத்தை உலகெங்கிலும் உள்ள குழந்தை மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது. பெரும்பாலான பெற்றோர்கள் தடுப்பூசியின் முக்கியத்துவத்தைப் பற்றி அறிந்திருக்கிறார்கள், ஆனால் சரியான பதிவு இல்லாததால், முக்கியமான தடுப்பூசிகள் தவறவிடப்படுகின்றன. சமீபகாலங்களில் தடுப்பூசி அட்டை சில நிறுவனங்களைச் சார்ந்த ஆவணமாக பாதுகாக்கப்படுகிறது, இது அனைத்து தரவையும் ஒரே இடத்தில் சேமித்து வைத்திருக்கிறது, இதனால் பெற்றோர்கள் தங்கள் குழந்தையின் ஆரோக்கியத்தைத் தொடர்ந்து அந்த நிறுவனங்களைத் தொடர்பு கொள்வதின் மூலம் அவற்றில் கிடைக்கும் ஆவணங்களின் மூலமும் கண்காணிக்க முடியும்.  உங்களுடைய பாஸ்போர்ட் மற்றும் பிற முக்கியமான ஆவணங்களைப் போல உங்கள் குழந்தையின் தடுப்பூசி அட்டையையும் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். மிக எளிமையாக நீங்கள் படித்துப் புரிந்து கொள்வதற்கு எளிமையான தடுப்பூசி விவரங்கள் குறித்த அட்டையை இங்கே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 

தடுப்பூசி அட்டை ஏன் இவ்வளவு முக்கியமானது?
தடுப்பூசி அட்டையில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள அட்டவணைக்கு ஏற்ப குழந்தைகளுக்கு தடுப்பூசி போட வேண்டும் என்று நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (சி.டி.சி) பரிந்துரைக்கின்றன. இது மிகவும் முக்கியமானதாக குழந்தை மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது. இத்தகைய தடுப்பூசிகள் மூலம் குழந்தைகள் உயிருக்கு ஆபத்தான நோய்களாக மாறக்கூடிய சில நோய்களுக்கு எதிராக, சரியான நேரத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க முடியும். ஏனெனில் அவர்கள் ஒரு குறிப்பிட்ட வயதை எட்டும்போது சில வியாதிகளுக்கு ஆளாக நேரிடும் என்பதால், பாதுகாப்பான மற்றும் அறிவியலை அடிப்படையாகக் கொண்ட ஒரு அட்டவணையைப் பின்பற்ற வேண்டியது அவசியம். இதைப் பின்பற்றுவதன் மூலம் அடிக்கடி தேவையில்லாமல் மருத்துவரைச் சந்திக்கும் தேவையும் குறைகிறது. தாய்க்கும் குழந்தையின் ஆரோக்கியத்தின் மீது ஒருவித பாதுகாப்புணர்வைத் தருகிறது எனலாம். 



வயது வாரியாக தடுப்பூசி அட்டவணை
பொதுவாக, பெற்றோர்கள் குழந்தையின் முதல் ஆண்டு போட வேண்டிய தடுப்பூசிகளை முறையாகப் பின்பற்றுகிறார்கள். இதை சரியாகப் போட்டாலே போதும் குழந்தை வளரும்போது, அடுத்தடுத்து போட வேண்டிய தடுப்பூசிகளுக்குத் தேவை இருக்காது என்ற மனநிறைவுக்கு வந்துவிடுகிறார்கள். குழந்தைகளுக்கு முதல் ஐந்து ஆண்டுகள் வரை தடுப்பூசியைத் தவறாமல் போட வேண்டிய முக்கியக் காலகட்டமாகும். அதில் கீழ்வரும் தடுப்பூசிகளும் அடக்கம்.

பிறந்த குழந்தைக்கு
பி.சி.ஜி (காசநோய்)
ஹெபடைடிஸ் பி
OPV (போலியோ தடுப்பு மருந்து)

6 வாரம் - 6 மாதங்களுக்கு இடைப்பட்ட காலத்தில்
டிடிபி, ஹிப் (ஹீமோபிலியஸ் இன்ஃப்ளூயன்ஸா வகை பி), ஹெபடைடிஸ் பி, ஐபிவி (போலியோ தடுப்பூசி)
பி.சி.வி (நியூமோகாக்கல் கான்ஜுகேட் தடுப்பூசி)
ரோட்டா வைரஸ்
6-12 மாதங்களுக்கு இடையில்:
இன்ஃப்ளூயன்ஸா (5 வயது வரையிலான குழந்தைகளுக்கு பொதுவாக பரிந்துரைக்கப்படுகிறது)
எம்.எம்.ஆர் (மீஸ்ல்ஸ், மாம்ப்ஸ் & ரூபெல்லா)
டைபாய்டு
மெனிங்கோகல்

1-2 ஆண்டுகளுக்கு இடையில்:
ஹெபடைடிஸ் ஏ
 சின்னம்மை
 டிடிபி, ஹிப், ஐபிவி (போலியோ தடுப்பூசி)
 நிமோகோகல்
எம்.எம்.ஆர்  (மீஸ்ல்ஸ், மாம்ப்ஸ் & ரூபெல்லா)

2-6 ஆண்டுகளுக்கு இடையில்:
மெனிங்கோகல் 
எம்.எம்.ஆர் (மீஸ்ல்ஸ், மாம்ப்ஸ் & ரூபெல்லா)
டிப்தீரியா, ஐபிவி (போலியோ தடுப்பூசி)


தடுப்பூசி அட்டை பற்றிய முக்கிய தகவல்கள்:
தடுப்பூசி அட்டை என்பது ஒவ்வொரு குழந்தைக்கும் எப்போதும் வைத்திருக்க வேண்டிய மிக முக்கியமான சுகாதார ஆவணங்களில் ஒன்றாகும், உங்கள் குழந்தை மருத்துவரைப் பார்க்கும்போது அதை எப்போதும் உங்களுடன் எடுத்துச் செல்லுங்கள். அதேபோல் உங்கள் குழந்தை மருத்துவரைப் பார்க்கும் போதெல்லாம் பெற்றோர்கள் இந்த அட்டைகளைப் பரிசோதித்துப் புதுப்பிப்பது முக்கியம். திடீரென தடுப்பூசி போட வேண்டிய தேவை ஏற்படுகிற சமயங்களில் இந்த அட்டையைப் புதுப்பித்து வைத்திருப்பது மிகவும் பயனுடையதாக இருக்கும். இவ்வாறு பெற்றோர்கள் தங்களைத் தயார்ப்படுத்திக் கொள்ள இந்திய நோயெதிர்ப்பு மையத்தின் இலவச டிஜிட்டல் தடுப்பூசி நினைவூட்டல் சேவைகள் வழங்கப்படுகின்றன. தடுப்பூசி அட்டையை பராமரிப்பதைத் தவிர, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் உடல்நலம் குறித்து கூடுதலாக தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்களையும் இந்த சேவைகளின் மூலம் பெறலாம். 

குழந்தைகள் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க ஒற்றை விதிமுறை என்று எதுவுமே இல்லை. ஆனால் சரியான நேரத்தில் தடுப்பூசிகள் போடுவதன் மூலம் அவர்களுக்கு நீண்ட காலத்திற்கு ஆரோக்கியத்தையும் பாதுகாப்பையும் வழங்க முடியும். அவர்களுடைய ஆரோக்கியமான வாழ்க்கைக்கு அவர்களுடைய நோயெதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கச் செய்ய முடியும். 

Disclaimer: A public awareness initiative by GlaxoSmithKline Pharmaceuticals Limited. Dr. Annie Besant Road, Worli, Mumbai 400 030, India. Information appearing in this material is for general awareness only and does not constitute any medical advice. Please consult your Pediatrician for more information, any question or concern you may have regarding your condition. Please consult your Pediatrician for the complete list of vaccine preventable diseases and for the complete vaccination schedule for each disease. Please report adverse events with any GSK product to the company at india.pharmacovigilance@gsk.com. NP-IN-MLV-OGM-200033, DOP Dec 2020
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments