லிபியா, ஏமன், லெபனான், துருக்கி, ஆர்மீனியா, ஆப்கானிஸ்தான், சிரியா, ஈரான், சோமாலியா, பெலாரஸ், காங்கோ ஜனநாயக குடியரசு மற்றும் வெனிசுலா ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்வதற்கு எதிரான சவுதி எச்சரிக்கை விடுத்துள்ளது.
கொரோனா வைரஸ் கட்டுக்குள் இல்லாத நாடுகளுக்கும் மற்றும் புதிய உருமாறிய தொற்றுகள் பதிவான நாடுகளுக்கும் பயணிப்பதைத் தவிர்க்குமாறும் அமைச்சகம் தனது குடிமக்களை வலியுறுத்தியுள்ளது.
அதிக ஆபத்துள்ள நாடுகளில் உள்ள குடிமக்கள் உடனடியாக சவுதி அரேபிய தூதரகத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியது. அனுமதிக்கப்பட்ட நாடுகளுக்கு பயணிக்க விரும்பும் சவுதி அரேபியர்கள் கொரோனா வைரஸ் நோய்க்கு எதிரான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பின்பற்றுவதை உறுதிசெய்து, பாதுகாப்பற்றதாகக் கருதப்படும் பகுதிகளிலிருந்து விலகி இருக்க வேண்டும் என்று அமைச்சகம் மேலும் கூறியுள்ளது.
பல நாடுகளில் நிலவும் பாதுகாப்பு நிலைமைகள், உறுதியற்ற தன்மை, கொரோனா வைரஸ் தொற்று மற்றும் புதிய உருமாறிய வைரஸ் பரவல் ஆகியவற்றின் மத்தியில், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமிருந்து முன் அனுமதி பெறாமல் குறிப்பிட்ட நாடுகளுக்கு பயணம் மேற்கொள்வதற்கு எதிராக எச்சரிக்கை விடுப்பதாக உள்துறை அமைச்சகம் டுவிட்டரில் தெரிவித்துள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.