பச்சிளம் குழந்தைகள் முதல் 5 வயது குழந்தைகள் வரைவழங்கப்படும் தேசிய போலியா சொட்டு மருந்து முகாம் ஜனவரி 31-ம் தேதி நாடுமுழுவதும் நடைபெறும் என மத்திய சுகாதாரத்துறை இன்று அறிவித்துள்ளது.
போலியோ முகாம் வரும் 17-ம் தேதி நடைபெறும் என முதலில் அறிவிக்கப்பட்டு, பின்னர் அந்த தேதி ரத்து செய்யப்பட்ட நிலையில் இன்று மீண்டும் புதிய தேதியை மத்திய அரசு அறிவித்துள்ளது.
வரும் 16-ம் தேதி நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி போடும் முகாம் தொடங்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது. இதையடுத்து, போலியா சொட்டுமருந்து முகாம் 17-ம் தேதி நடக்க இருந்தது தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்தது.
இரு முகாம்களையும் அடுத்தடுத்து நடத்துவதில் பல்வேறு சிரமங்கள் இருப்பதால், போலியோ முகாம் தள்ளிவைக்கப்பட்டதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கடந்த 9-ம் த்தேதி அனைத்து மாநில அரசுகளின் சுகாதாரத்துறை செயலாளர்களுக்கும் கடிதம் அனுப்பி இருந்தது.
இந்நிலையில் மத்திய சுகதாரத்துறை அமைச்சகம் இன்று ஓர் அறிவிப்பை வெளியிட்டது அதில் “நாடுமுழுவதும் கரோனா தடுப்பூசி முகாம் வரும் 16ம் தேதி பிரதமர் மோடியால் தொடங்கி வைக்கப்படுகிறது.
இதன் காரணமாக, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் பல்வேறு அமைச்சகங்களுடன் நடத்திய ஆலோசனையையடுத்து, 17-ம் தேதி நடக்க இருந்தபோலியா சொட்டு மருந்து முகாம் ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் ஜனவரி 31-ம்தேதி போலியோ சொட்டு மருந்து முகாமை நடத்தலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் 30-ம் தேதி குடியரசுத் தலைவர் மாளிகையில் காலை 11.45 மணிக்கு சில குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கி முகாமைதொடங்கி வைப்பார். 31-ம் தேதி நாடுமுழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் நடக்கும்” இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.