கோட்டைப்பட்டினம் அருகே உள்ள புதுக்குடி பகுதியை சேர்ந்த நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க சென்றனர். இதில் புதுக்குடி கிராமத்தை சேர்ந்த முனியகுமார் (வயது 35) என்பவருக்கு சொந்தமான நாட்டுப் படகில் சிங்காரவேல் (40), முத்து முனியாண்டி (32), வடிவேல் (38), ஜெகன் (34), பாண்டி (30) ஆகியோர் மீன்பிடிக்க சென்றனர்.
இவர்கள் 1 மைல் கடல் தூரத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, இவர்கள் வலையில் அரசால் தடைசெய்யப்பட்ட தாய் கடல்பசுவும், அதன் குட்டிகளும் சிக்கின. அழிந்து வரும் பாலுட்டி இனமான கடல்பசுவை மீனவர்கள் வலையிலிருந்து மீட்டு பத்திரமாக கடலுக்குள் விட்டனர். அழிந்து வரும் கடல்பசு இனத்தை காப்பாற்றும் நோக்கத்தோடு செயல்பட்ட மீனவர்களை திருச்சி மண்டல வனபாதுகாவலர் ராமசுப்பிரமணியன், புதுக்கோட்டை மாவட்ட வன அலுவலர் சுதாகர், அறந்தாங்கி வனசரக அலுவலர் சதாசிவம் ஆகியோர் பாராட்டினர்.
இது குறித்து வனத்துறையினர் கூறும்போது, கடல் பசு மனிதர்களை போல் குட்டி போட்டு பால் கொடுக்கும் பாலூட்டி வகையை சேர்ந்தது. கடல்பசு கடல் புற்களை உண்டு வாழும் தாவர உண்ணி மீன் இனத்தை சார்ந்தது ஆகும்.அழிந்து வரும் அரிய வகை இனமான கடல்பசுவின் தாய் மற்றும் அதன் குட்டிகளை மீட்டு மீண்டும் கடலில் விட்ட மீனவர்களின் செயல் பாராட்டத்தக்கது. இதே போன்று அனைத்து மீனவர்களும் செயல்பட்டு கடல்பசுவை பாதுகாக்க வேண்டும்.கடல் பசுவை பாதுகாப்பதன் மூலம் கடல் வளம் பெருகும் என்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.