மதுரை செக்கானூரணியை சேர்ந்த 4 வயது சிறுமி அனுஷ்கா. இந்த சிறுமி விளையாடிக் கொண்டிருந்த போது தவறுதலாக இரும்பு ஆணியை விழுங்கிவிட்டால். இதனால் பதட்டம் அடைந்த பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் சிறுமியை மதுரை தத்தநேரி அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
பரிசோதனை செய்த தனியார் மருத்துவமனை மருத்துவ குழுவினர் வயிற்றுப் பகுதியில் ஆபத்தான இடத்தில் இரும்பு ஆணி இருப்பதை கண்டறிந்தனர்.
இதையடுத்து மருத்துவ குழுவினர் உடனடியாக சிறுமியின் வயதை கருத்தில் கொண்டு எண்டாஸ்கோப்பி மூலம் நான்கு மணிநேர போராட்டத்தில் எந்தவித சிக்கலும் இல்லாமல் லாவகமாக ஆணியை வெளியே எடுத்து சாதனை புரிந்தனர்.
இதில் எந்தவித ஆபரேஷன் இல்லாமல் மயக்க மருந்து நிபுணர்கள் மற்றும் எண்டோஸ்கோபி சிகிச்சை நிபுணர்கள் மூலம் லாவகமாக இரும்பு ஆணியை அகற்றினர். இதில் ஆணி வயிற்றுப் பகுதியிலோ குடல் பகுதியையோ கிழித்து விட்டால் சீழ் பிடித்து உயிருக்கே ஆபத்தாக முடியும் என மருத்துவர்கள் தெரிவித்தனர். சிகிச்சைக்கு பிறகு சிறுமி இப்போது முழு ஆரோக்கியத்துடன் இயல்பாகவும் இருப்பதாக பெற்றோர்கள் கூறினர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.