அறந்தாங்கி அருகே கார்-மோட்டார் சைக்கிள் மோதல்- 3 பேர் காயம்




அறந்தாங்கி அருகே உள்ள கே.புதுப்பட்டியை சேர்ந்தவர் செங்கதிர்வேல் (வயது 18). இவர் நேற்று அவரது நண்பரின் நிகழ்ச்சிக்கு வந்து விட்டு நண்பர்கள் வசந்த், ராகுல் ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் அழியாநிலை வாழக்குடியிருப்பில் இருந்து அறந்தாங்கி-புதுக்கோட்டை மெயின் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக நாகப்பட்டினத்தை சேர்ந்த ராஜேந்திரன் (46) என்பவர் ஓட்டி வந்த கார், எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. 

இதில், மோட்டார் சைக்கிளில் சென்ற 3 பேரும் காயம் அடைந்தனர். அந்த வழியாக சென்றவர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 


 
இந்த விபத்து குறித்து அறந்தாங்கி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments