அறந்தாங்கி பஸ் நிலையத்தை விரிவுபடுத்த, நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி தெரிவித்தார்.சட்டசபையில், கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்:
அ.தி.மு.க., - ரத்தினசபாபதி: அறந்தாங்கி தொகுதி, அரிமளம் ஒன்றியம், இரும்பாநாடு வீரமாகாளியம்மன் கோவில் முன்பாக, சமுதாயக்கூடம் அமைக்க வேண்டும்.
அமைச்சர் வேலுமணி: அப்பகுதியிலிருந்து, 2 கிலோ மீட்டர் தொலைவில், சமுதாயக்கூடம் உள்ளது. எனவே, புதிதாக தேவையில்லை.
ரத்தினசபாபதி: அங்கு சமுதாயக்கூடம் அமைத்தால், மக்கள் ஆதரவு தருவர். வீரமாகாளியம்மன் அருள் கிடைக்கும். அறந்தாங்கி சந்தையை மீட்டு தர வேண்டும். பஸ் நிலையத்தை விரிவாக்க வேண்டும்.
அமைச்சர் வேலுமணி: பஸ் நிலையத்தை விரிவுபடுத்த, நடவடிக்கை எடுக்கப்படும். சந்தை தொடர்பாக, இரு ஊராட்சிகள் இடையே பிரச்னை உள்ளது; வருமானம் பாதிக்கப்படும் என்கின்றனர். இது தொடர்பாக, அதிகாரிகள் பேசி தீர்வு காண, நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, விவாதம் நடந்தது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.