திருமயம் ஊராட்சி மன்ற தலைவர் சிக்கந்தர். இவர் திருமயம் ஊராட்சி குழு என்ற வாட்ஸ்-அப் குழு உருவாக்கி அதில் ஊராட்சியை சேர்ந்த பொதுமக்களின் செல்போன் எண்களை இணைத்துள்ளார்.
இதில் திருமயம் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் குடிதண்ணீர் பிரச்சினை, தெருவிளக்கு பிரச்சினை, கழிவுநீர் வாய்க்கால் பிரச்சினை, சுகாதார சம்பந்தமான எந்த பிரச்சினையாக இருந்தாலும் அலுவலகத்துக்கு செல்லாமலேயே பொதுமக்கள் தங்களுடைய செல்போன் மூலம் வாட்ஸ்-அப் மூலம் பதிவு செய்து அனுப்புகின்றனர்.
அனுப்பியவுடன் சிறிது நேரத்தில் தகவலை பெற்றுக்கொண்டதாகவும், அதனை உடனே சரி செய்து கொடுப்பதாகவும் அவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் தகவல் தெரிவித்து வருகிறார்.
மேலும் அந்த கோரிக்கையை அன்றைய தினமே நேராக சென்று பார்வையிட்டு பொதுமக்களுக்கு சரி செய்துகொடுத்து விடுவதால் பொதுமக்கள் மத்தியில் பெரும் பாராட்டை பெற்று வருகிறார். மேலும் இந்த நடைமுறை கொரோனா ஊரடங்கின் போது மிகவும் பயனுள்ளதாக இருந்தது என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
கொரோனா காலகட்டத்தில் சிறப்பாக பணி செய்தற்காக சேவா ரத்னா விருதும், அசுத்தமாக கிடந்த சத்தியமூர்த்தி ஊரணியில் ஊர் பொதுமக்கள் ஒத்துழைப்போடு 5 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பீட்டில் தூய்மைப்படுத்தப்பட்டு நிலத்தடி நீரை சேமித்து வைத்தமைக்கு அகாடமி யூனிவெர்செல் குளோபல் பீஸ் சார்பில் டாக்டர் பட்டமும் வழங்கப்பட்டது. மேலும் 90 வருடங்களாக பராமரிப்பின்றி நடந்த சமாதான கிணறுகளை புனரமைப்பு பணி செய்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்து கொடுத்துள்ளார். ஒரே ஆண்டில் இரண்டு விருதுகளை பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.