அறந்தாங்கி உட்கோட்ட போலீஸ் டிஎஸ்பி ஜெயசீலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: அறந்தாங்கி உட்கோட்டத்தில் தற்போதுள்ள சட்டம் மற்றும் ஒழுங்குநிலை மற்றும் சில வகுப்புவாத சூழ்நிலைகள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள், ஏனைய அமைப்புகள், தங்கள் எண்ணம்போல ஊர்வலங்கள், பொதுக்கூட்டங்கள், வேலைநிறுத்தம், ஆர்ப்பாட்டம், முழு அடைப்பு, உண்ணாவிரதம் மற்றும் சாலை மறியல் போன்றவற்றில் ஈடுபடுவது, மேலும் இதர சட்டத்துக்கு புறம்பான ஏதேனும் நடவடிக்கையில் ஈடுபடுவது பொதுஅமைதிக்கும், சட்டம் மற்றும் ஒழுங்கிற்கும் பங்கம் ஏற்படுத்தும்.
எனவே பொது அமைதியை பேணிக்காக்கும் பொருட்டு மேற்காணும் நிகழ்வுகளை ஒழுங்குபடுத்த வேண்டிய அவசியமாகும். சென்னை தமிழ்நாடு 1966ம் ஆண்டு 22ம் சட்டத்தில் குறிப்பிட்டுள்ள 1861ம் ஆண்டு காவல்துறை சட்டத்தில் 30(2)பிரிவின்கீழ் வழங்கியுள்ள அதிகாரங்களை கொண்டு அறந்தாங்கி உட்கோட்டத்தின் காவல் எல்லைக்குள் எந்த இடத்திலும் ஊர்வலங்கள், பொதுக்கூட்டங்கள், வேலைநிறுத்தம், ஆர்ப்பாட்டம், முழு அடைப்பு, உண்ணாவிரதம் மற்றும் சாலை மறியல் நடத்த முயல்பவர்கள் அந்த நிகழ்வுகள் நடைபெறும் நாள், இடம், நேரம், வட்டம் மற்றும் அதுதொடர்பான விபரங்கள் அனைத்தையும் குறிப்பிட்டு அந்தந்த பகுதிகளுக்கு அதிகார வரம்பு கொண்டுள்ள காவல் நிலையங்களை தொடர்பு கொண்டு குறைந்தபட்சம் ஒரு வாரத்துக்கு முன்பாக அனுமதி பெற விண்ணப்பித்து முறையான அனுமதி பெற வேண்டும். இந்த ஆணை சமய ஊர்வலங்கள், திருமண ஊர்வலங்கள் மற்றும் இறுதி ஊர்வலங்கள் ஆகியவற்றுக்கு பொருந்தாது, இந்த ஆணை இன்று (அதாவது நேற்று) முதல் வரும் 20ம் தேதி நள்ளிரவு வரை அமலில் இருக்கும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.