புதுக்கோட்டை மாவட்டத்தில் பல தனியார் பஸ்களில் அரசு உத்தரவு இல்லாமல் திடீரென 5 ரூபாய் கட்டண உயர்த்தப்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
புதுக்கோட்டையிலிந்து, பட்டுக்கோட்டை, பேராவூரணி, கறம்பக்குடி ஆகிய ஊர்களுக்குச் செல்லும் சில தனியார் பஸ்களில் ஓரிரு நாட்களாக டீசல் விலை உயர்வை காரணம் காட்டி மறைமுகமாக அரசு அனுமதியின்றி 5 ரூபாய் கட்டணம் உயர்த்தி உள்ளனர். இதனால், அவ்வப்போது பஸ்களில் பயணிகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கல்லூரி செல்லும் மாணவர்கள், பொதுமக்கள் இதனால் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதற்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்டதுறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இதுகுறித்து, இ.கம்யூ ஒன்றிய செயலாளர் சொர்ணகுமார் கூறியதாவது: புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் தனியார் பஸ்களில் ஓரிரு நாட்களாக ஐந்து ரூபாய் கட்டணம் உயர்த்தி இருப்பது மக்களை கவலையடைய செய்திருக்கிறது.
இந்த கட்டண உயர்வு அரசு கவனத்திற்கு சென்றுள்ளதா அரசு ஆதரவோடு செயல்படுகிறதா, மறைமுக உத்தரவா என்கிற பல்வேறு சந்தேகங்களை மக்கள் மத்தியில் எழுப்பியிருக்கிறது. உடனடியாக தமிழக அரசு தலையிட்டு,
புதுக்கோட்டை மாவட்டத்தில் தனியார் பஸ் கட்டண உயர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். இதே நிலை தொடர்ந்தால் ஆங்காங்கே மறியல் போராட்டத்தை நடத்துவோம் என தெரிவித்தார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.